திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3749 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3749திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் தமக்கு இருப்பிடமான கோயில்கள் பலவுண்டாயிருக்க ஒர்டமில்லாதாரைப் போலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்து க்ருத க்ருதயனானானென்கிறார்.) 6
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6
பதவுரை Show / Hide
திருப் பேர் நகரான்,Thirup per nagaraan - திருப்பேர் நகாரிலே வர்த்திப்பவானாய்
திருமாலிருஞ் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்,Thirumaalirun cholai poruppe uraiginra piraan - திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணுமவனால் இப்பா பரமபோக்யமான பல தலங்களையுடையனான எம்பெருமான்
இன்று வந்து,Endru vandhu - இன்று என்பாலெழுந்தருளி
இருப்பேன் என்று,Eruppein endru - ளும்மிடத்திலேயே யிருக்கக் கடவேனேன்று சொல்லி
என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னுள்ளம் பூர்ணமாகும் படி புகுந்தான்;
விருப்பே பெற்று,Viruppe petru - அவருடைய அபிமானத்தைப் பெற்று
அமுதம் உண்டுகளித்தேன்,Amudham undugaliththen - அம்ரதபானம் பண்ணிக் களித்வனாயினேன்.