திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3750 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3750திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில்.) 7
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7
பதவுரை Show / Hide
வண்டு களிக்கும் பொழில் சூழ்,Vandu kalikkum pozhi soozh - வண்டுகள் மதுவைப் பருகிக் களிக்கும்படியான சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான்,Thiru peraan - திரப்பேர் நகாரில் வாழுமெம்பெருமான்
கண்டு களிப்ப,Kandu kalippa - தன்னை நான் அநவரதம் கண்டு களிக்குமாறு
கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என்கண்ணுக்கு இலக்காகி விட்டுப்பிரியாதிரா நின்றான்
உண்டு களித்அதற்கு,Undu kalidhu atharkku - இப்படிப்பட்ட அநுபவம் பெற்றமகிழ்ந்த எனக்கு
உம்பர் என் குறை,Umbar en kurai - மேலுலகத்திலே சென்று அநுபவிக்கவேணுமென்கிற குறை யொன்று உண்டோ?
மேலைத் தொண்டு உகளித்து,Melai thondu ugaliththu - மேலான கைங்காரிய ரஸம்அதிசயித்து
அந்தி தொழும் சொல்லு பெற்றேன்,Andhi thozhum sollu petren - அதினுடைய சரமதசையிலே நம: என்று சொல்லுகிற சொல்லைச் சொல்லவும் பெற்றேன்.