| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3751 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (பரமபோக்யனான திருப்பேர் நகரான் என்பக்கலிலே வ்யாமோஹமே வடிவெடுத்தவனாய் ஒருநாளும் விட்டு நீங்கமாட்டாதரனாய் என்னெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 8 | கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8 | கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என் கண்ணைவிட்டு அதலாதிருக்கின்றான்; கருத்தின் கண் பெரியன்,Karuththin kan periyan - என்னைத் திருநாட்டுக்குக் கொண்டு போவதில் விசேஷமான பாரிப்பு உடையனாயிராநின்றான்; எண்ணில் நுண்பொருள் தானே,Ennil nunporul thaane - எண்ணப்புகுந்தால் எண்ணமுடியாத மிகவும் சூகூஷ்மமான ஸ்வாவமுடையவனே; ஏழ் இசையின் சுவை,Ezhu isaiyin suvai - ஸப்தஸ்வரங்களின் ரஸமே வடிவெடுத்தவன்; வண்ணம் நல்மணிமாடங்கள்,Vannam nalmanimadangal - பலவகைப்பட்ட சிறந்த ரத்னங்களழுத்தின மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் இன்று என் மனத்து செறிந்து புகுந்தான்,Indru en manaththu serindhu pugundhaan - இன்று என்னெஞ்சிலே திடமாகப் புகுந்தான் திண்ணம்,Thinnam - இது ஸத்தியம் |