Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3751 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3751திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (பரமபோக்யனான திருப்பேர் நகரான் என்பக்கலிலே வ்யாமோஹமே வடிவெடுத்தவனாய் ஒருநாளும் விட்டு நீங்கமாட்டாதரனாய் என்னெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 8
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8
கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என் கண்ணைவிட்டு அதலாதிருக்கின்றான்;
கருத்தின் கண் பெரியன்,Karuththin kan periyan - என்னைத் திருநாட்டுக்குக் கொண்டு போவதில் விசேஷமான பாரிப்பு உடையனாயிராநின்றான்;
எண்ணில் நுண்பொருள் தானே,Ennil nunporul thaane - எண்ணப்புகுந்தால் எண்ணமுடியாத மிகவும் சூகூஷ்மமான ஸ்வாவமுடையவனே;
ஏழ் இசையின் சுவை,Ezhu isaiyin suvai - ஸப்தஸ்வரங்களின் ரஸமே வடிவெடுத்தவன்;
வண்ணம் நல்மணிமாடங்கள்,Vannam nalmanimadangal - பலவகைப்பட்ட சிறந்த ரத்னங்களழுத்தின மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகாரிலுறையும் பெருமான்
இன்று என் மனத்து செறிந்து புகுந்தான்,Indru en manaththu serindhu pugundhaan - இன்று என்னெஞ்சிலே திடமாகப் புகுந்தான்
திண்ணம்,Thinnam - இது ஸத்தியம்