திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3753 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3753திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் எம்பெருமானை மடிபித்துக் கேள்விகேட்டார் ஆழ்வார்; அதற்குத் தான் சொல்லலாவதொரு ஹேது காணாமையாலே கவிழ்தலை யிட்டு வாய் மூடியிருந்து ‘உமக்கு மேல்செய்ய வேண்டுவது என்? சொல்லிக்காணீர்’ என்ன; அதற்குச் சொல்லுகிறது இப்பாட்டு.) 10
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10
பதவுரை Show / Hide
எத்தாய்,Eththaai - எம்பெருமானே!
உற்றேன்,Uttren - (உனது திருவடிகளைக்) கிட்டப்பெற்றேன்;
உகந்து பணி செய்து,Ugandhu pani seidhu - திருவாய்மொழி பாடுகையாகிற கைங்காரியத்தை ப்ரீதியோடே செய்து
உன் பாதம் பெற்றேன்,Un paadham petren - உன்திருவடிகளை அணுகினவானனேன்;
ஈதே இன்னம் வேண்டுவது,Eedhe innam venduvadhu - இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்;
கற்றார்,Katrar - குரு முகமாகக் கற்றவர்களாயும்
மறைவாணர்கள்,Maraivaanargal - வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vaal - வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும்
திருப்பொராற்கு அற்றார்,Thiruporaarku atrar - பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான்
அடியார் தமக்கு,Adiyaar thamakku - பாகவதர்களுக்கு
அல்லல் நில்லா,Allal nillaa - அநுபவ விரோதிகள் நில்லாது போம்,