Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3753 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3753திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் எம்பெருமானை மடிபித்துக் கேள்விகேட்டார் ஆழ்வார்; அதற்குத் தான் சொல்லலாவதொரு ஹேது காணாமையாலே கவிழ்தலை யிட்டு வாய் மூடியிருந்து ‘உமக்கு மேல்செய்ய வேண்டுவது என்? சொல்லிக்காணீர்’ என்ன; அதற்குச் சொல்லுகிறது இப்பாட்டு.) 10
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10
எத்தாய்,Eththaai - எம்பெருமானே!
உற்றேன்,Uttren - (உனது திருவடிகளைக்) கிட்டப்பெற்றேன்;
உகந்து பணி செய்து,Ugandhu pani seidhu - திருவாய்மொழி பாடுகையாகிற கைங்காரியத்தை ப்ரீதியோடே செய்து
உன் பாதம் பெற்றேன்,Un paadham petren - உன்திருவடிகளை அணுகினவானனேன்;
ஈதே இன்னம் வேண்டுவது,Eedhe innam venduvadhu - இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்;
கற்றார்,Katrar - குரு முகமாகக் கற்றவர்களாயும்
மறைவாணர்கள்,Maraivaanargal - வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vaal - வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும்
திருப்பொராற்கு அற்றார்,Thiruporaarku atrar - பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான்
அடியார் தமக்கு,Adiyaar thamakku - பாகவதர்களுக்கு
அல்லல் நில்லா,Allal nillaa - அநுபவ விரோதிகள் நில்லாது போம்,