Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3754 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3754திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார்.) 11
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11
அல்லல் நில்லா,Allal nillaa - துக்கங்களானவை தானே விட்டுப் போகுமிடமாய்
நீள் வயல் சூழ்,Neel vayal soozh - பெருத்த வயல்களாலே சூழ்ப்பட்டதான
திருப்பேர் மேல்,Thirupper mel - திருப்பேர் நகர் விஷயமாக
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்,Nallaar palarvaal kurukoorch sadagopan - நல்லார் நவில் குருகூர் நகரரான ஆழ்வாருடையதான
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்,Sol aar tamizh aayiraththul ivai paththum vallaar - தமிழிச்சொல் நிரம்பிய ஆயிரத்தினுள் இப்பதிகத்தைக் கற்கவல்லவர்களான
தொண்டர் ஆள்வது,Thondar aalvadhu - பாகவதர் களானவர்கள் ஆளுமிடம்
சூழ்பொன் விசும்பு.,Soozh pon visumbu - பரமபதமாகும்