| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3755 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி) 1 | சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1 | En appan, என் அப்பன் - அஸ்மத் ஸ்வாமியாய் Vaazhpuhal,வாழ்புகழ் - நித்ய கீர்த்தியுக்தனான Naaranaan,நாரணன் - ஸ்ரீமந் நாராயணனுடைய Thamarai,தமரை - அடியார்களை Kandu ukanthu,கண்டு உகந்து - வரக்கண்டு களித்து Soozh visumpu,சூழ் விசும்பு - எங்கும்பரந்த ஆகாசத்திலே Animugil,அணிமுகில் - அழகிய மேகங்கள் Thooriyam muzhakin,தூரியம் முழக்கின - வாத்ய கோஷம் செய்தன போன்றிருந்தன; Aal kadal,ஆழ் கடல் - ஆழமான கடல்கள் Alai thirai,அலை திரை - அலைந்து வருகிற திரைகளை Kai eduthu,கை எடுத்து - கையாகக் கொண்டு Aadina,ஆடின - கூத்தாடின; Ezhu pozhilum,ஏழ் பொழிலும் - ஸப்த த்வீபங்களும் Vazham aandhiya,வளம் ஏந்திய - உபஹாரங்களைக் கையேந்தின. |