Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3755 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3755திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி) 1
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1
En appan, என் அப்பன் - அஸ்மத் ஸ்வாமியாய்
Vaazhpuhal,வாழ்புகழ் - நித்ய கீர்த்தியுக்தனான
Naaranaan,நாரணன் - ஸ்ரீமந் நாராயணனுடைய
Thamarai,தமரை - அடியார்களை
Kandu ukanthu,கண்டு உகந்து - வரக்கண்டு களித்து
Soozh visumpu,சூழ் விசும்பு - எங்கும்பரந்த ஆகாசத்திலே
Animugil,அணிமுகில் - அழகிய மேகங்கள்
Thooriyam muzhakin,தூரியம் முழக்கின - வாத்ய கோஷம் செய்தன போன்றிருந்தன;
Aal kadal,ஆழ் கடல் - ஆழமான கடல்கள்
Alai thirai,அலை திரை - அலைந்து வருகிற திரைகளை
Kai eduthu,கை எடுத்து - கையாகக் கொண்டு
Aadina,ஆடின - கூத்தாடின;
Ezhu pozhilum,ஏழ் பொழிலும் - ஸப்த த்வீபங்களும்
Vazham aandhiya,வளம் ஏந்திய - உபஹாரங்களைக் கையேந்தின.