Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3756 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3756திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்;) 2
நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2
Naaranaan thamarai kandu,நாரணன் தமரை கண்டு - பாகவதர்களைக் கண்டு
Nal neer mugil,நல் நீர் முகில் - நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது
Ukanthu,உகந்து - மகிழ்ந்து
Uyar vinnil,உயர் விண்ணில் - உயர்ந்த ஆகாசத்திலே
Pooranam pon kudam poorthadhu,பூரணம் பொன் குடம் பூர்த்தது - பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது;
Neer ani kadalgal,நீர் அணி கடல்கள் - நீரை வஹிக்கிற கடல்களானவை
Nindru aarthina,நின்று ஆர்த்தின - நிலைநின்று கோஷித்தன
Ulaku,உலகு - அந்தந்த லோகங்களிலுள்ளார்
Engum thozhudhunar,எங்கும் தொழுதுனர் - எங்கும் தொழுதுகொண்டிருந்தார்கள்
Netuvarai thoranam niraitthu,நெடுவரை தோரணம் நிரைத்து - பெரியமலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தி.