| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3756 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்;) 2 | நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில் நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2 | Naaranaan thamarai kandu,நாரணன் தமரை கண்டு - பாகவதர்களைக் கண்டு Nal neer mugil,நல் நீர் முகில் - நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது Ukanthu,உகந்து - மகிழ்ந்து Uyar vinnil,உயர் விண்ணில் - உயர்ந்த ஆகாசத்திலே Pooranam pon kudam poorthadhu,பூரணம் பொன் குடம் பூர்த்தது - பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது; Neer ani kadalgal,நீர் அணி கடல்கள் - நீரை வஹிக்கிற கடல்களானவை Nindru aarthina,நின்று ஆர்த்தின - நிலைநின்று கோஷித்தன Ulaku,உலகு - அந்தந்த லோகங்களிலுள்ளார் Engum thozhudhunar,எங்கும் தொழுதுனர் - எங்கும் தொழுதுகொண்டிருந்தார்கள் Netuvarai thoranam niraitthu,நெடுவரை தோரணம் நிரைத்து - பெரியமலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தி. |