திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3757 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3757திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ஆதிவாஹிக லோகங்களென்று சிலவுண்டு; வழிநடத்துகிறவர்களாமவர்கள்; அவர்கள் எதிரே வந்து பூமார் பொழிந்து கொண்டாடும்படியை யருளிச்செய்கிறார்) 3
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3
பதவுரை Show / Hide
Andru,அன்று - முன்பொருகால்
Bhoomi alandhavan thamar munne,பூமி அளந்தவன் தமர் முன்னே - பூமியை அளந்துகொண்ட பகவானது அடியார்களின் ஸன்னிதியிலே
Doobam,தூபம் - தூபம் ஸமரிப்பிப்பதோடு
Nal malar mazhai,நல் மலர்மழை - நன்றான புஷ்பவர்ஷத்தைப் பொழிகின்றவர்களாய்க்கொண்டு
Ulakargal,உலகர்கள் - அந்தந்தலோகங்களிலுள்ளவர்கள்
Thozhudhanar,தொழுதனர் - தொழுதார்கள்;
Munivargal,முனிவர்கள் - ஆங்காங்குள்ளமுனிவர்கள் (தாங்கள் மௌனமாயிருக்கும் விரதத்தை தவிர்ந்து)
Vaikundharkku,வைகுந்தர்க்கு - ஸ்ரீ வைகுண்டத்தை நோக்கிப் போமவர்களுக்கு
Vazhi idhu endru,வழி இது என்று - இதுதான் வழி என்று சொல்லி
Edhire vandhu,எதிரே வந்து - அபிமுகர்களாக வந்து
Ezumin endru,எழுமின் என்று - எழுந்தருளவேணும் எழுந்தருளவேணுமென்று எச்சாரிக்கையிட்டு
irumarungu isaithanar,இருமருங்கு இசைத்தனர் - இருபக்கங்களிலும் சொன்னார்கள்