| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3758 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுலகங்களில் தேவர்கள், இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்குத் தோப்புகள் சமைத்தும் வாத்யகோஷம் முதலானவற்றைப் பண்ணியும் கொண்டாடும்படியைக் கூறுகிறார்) 4 | எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4 | Madhu vir thuzhai mudi,,மது விர் துழாய் முடி, - தேன் பெருகுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய Madhavan,மாதவன் - திருமாலினது Thamarkku,தமர்க்கு - அடியாரான பாகவதர்களுக்கு தேவர்கள் Edhiri edhiri,எதிர் எதிர் - இவர்கள் போகிற வழிக்கு முன்னே Irubu idam vaguthanar,இருப்பு இடம் வகுத்தனர் - தங்குமிடங்களைச் சமைத்தார்கள் Kathiravar,கதிரவர் - த்வாதசாதித்யர்களும் Avar avar,அவர் அவர் - மற்றுமுள்ளவர்களும் ஆதி வாஹிக கணங்களெல்லாம் Kai nirai kaattinar,கை நிரை காட்டினர் - பார்த்தருளீர் பார்த்தருளீர்!! என்று கைகாட்டிக் கொண்டேசென்றார்கள் Athir kural,அதிர் குரல் - அதிருகிற முழக்கத்தையுடைய Murasangal,முரசங்கள் - போரிகளானவை Alaikadal muzhakku otta,அலைகடல் முழக்கு ஒத்த - அலையெறிகின்ற ஸமுத்ரகாரிஜனை போன்றிருந்தனர். |