Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3758 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3758திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுலகங்களில் தேவர்கள், இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்குத் தோப்புகள் சமைத்தும் வாத்யகோஷம் முதலானவற்றைப் பண்ணியும் கொண்டாடும்படியைக் கூறுகிறார்) 4
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4
Madhu vir thuzhai mudi,,மது விர் துழாய் முடி, - தேன் பெருகுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய
Madhavan,மாதவன் - திருமாலினது
Thamarkku,தமர்க்கு - அடியாரான பாகவதர்களுக்கு தேவர்கள்
Edhiri edhiri,எதிர் எதிர் - இவர்கள் போகிற வழிக்கு முன்னே
Irubu idam vaguthanar,இருப்பு இடம் வகுத்தனர் - தங்குமிடங்களைச் சமைத்தார்கள்
Kathiravar,கதிரவர் - த்வாதசாதித்யர்களும்
Avar avar,அவர் அவர் - மற்றுமுள்ளவர்களும் ஆதி வாஹிக கணங்களெல்லாம்
Kai nirai kaattinar,கை நிரை காட்டினர் - பார்த்தருளீர் பார்த்தருளீர்!! என்று கைகாட்டிக் கொண்டேசென்றார்கள்
Athir kural,அதிர் குரல் - அதிருகிற முழக்கத்தையுடைய
Murasangal,முரசங்கள் - போரிகளானவை
Alaikadal muzhakku otta,அலைகடல் முழக்கு ஒத்த - அலையெறிகின்ற ஸமுத்ரகாரிஜனை போன்றிருந்தனர்.