| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3759 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம்) 5 | மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5 | Vaanavar,வானவர் - வருணன் இந்திரன் பிரஜாபதி ஆகிய தேவர்கள் Vaasalil,வாசலில் - தம்தம் ஸ்தானங்களின் வாசல்களிலே வந்து Maadhavan thamar endru,மாதவன் தமர் என்று - இவர்கள் பரமபாகவதர்கள்‘ என்று சொல்லி ஆதரித்து Pothumin,போதுமின் - இங்ஙனே எழுந்தருளுங்கள்! Emathu idam puguthuga,எமது இடம் புகுதுக - எங்களது அதிகார ஸ்தலங்களிலே பிரவேசியுங்கள் Endralum,என்றலும் - என்று சொன்னவாறே Vedam nal vaayavar,வேதம் நல் வாயவர் - (மேலுலகங்களிலே) வைதிகராயுள்ளவர்கள் Velvi ulmaduthu,வேள்வி உள்மடுத்து - தாங்கள் செய்த தேவபூஜைகளின் பலன்களை ஸமர்பிக்க Kinnarar gerudargal,கின்னரர் கெருடர்கள் - கின்னர்ர்களும், கருடர்களும் Keedhangal paadinar,கீதங்கள் பாடினர் - கீதங்களைப் பாடினார்கள் |