Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3759 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3759திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம்) 5
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5
Vaanavar,வானவர் - வருணன் இந்திரன் பிரஜாபதி ஆகிய தேவர்கள்
Vaasalil,வாசலில் - தம்தம் ஸ்தானங்களின் வாசல்களிலே வந்து
Maadhavan thamar endru,மாதவன் தமர் என்று - இவர்கள் பரமபாகவதர்கள்‘ என்று சொல்லி ஆதரித்து
Pothumin,போதுமின் - இங்ஙனே எழுந்தருளுங்கள்!
Emathu idam puguthuga,எமது இடம் புகுதுக - எங்களது அதிகார ஸ்தலங்களிலே பிரவேசியுங்கள்
Endralum,என்றலும் - என்று சொன்னவாறே
Vedam nal vaayavar,வேதம் நல் வாயவர் - (மேலுலகங்களிலே) வைதிகராயுள்ளவர்கள்
Velvi ulmaduthu,வேள்வி உள்மடுத்து - தாங்கள் செய்த தேவபூஜைகளின் பலன்களை ஸமர்பிக்க
Kinnarar gerudargal,கின்னரர் கெருடர்கள் - கின்னர்ர்களும், கருடர்களும்
Keedhangal paadinar,கீதங்கள் பாடினர் - கீதங்களைப் பாடினார்கள்