| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3760 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார்.) 6 | வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6 | Velvi ul matuthalum,வேள்வி உள் மடுத்தலும் - வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே Virai kamizh,விரை கமிழ - பரிமளம் மிக்க Narupukai,நறுபுகை - ஸீகந்த தூபங்களானவை Engum kalanthu,எங்கும் கலந்து - எங்கும் வியாபிக்க Kaalangal valam puri,காளங்கள் வலம் புரி - திருச்சின்னங்களையும் சங்கு களையும் Isaithanar,இசைத்தனர் - ஊதினார்கள் Vaal on kan madanthaiyar,வாள் ஒண் கண் மடந்தையர் - ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள் Aazhiyaan thamar,ஆழியான் தமர் - “திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே! Vaanagam aan mingal endru,வானகம் ஆண் மின்கள் என்று - இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி Magizhnthu vaazhthinar,மகிழ்ந்து வாழ்த்தினர் - ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள் |