Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3760 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3760திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார்.) 6
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6
Velvi ul matuthalum,வேள்வி உள் மடுத்தலும் - வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே
Virai kamizh,விரை கமிழ - பரிமளம் மிக்க
Narupukai,நறுபுகை - ஸீகந்த தூபங்களானவை
Engum kalanthu,எங்கும் கலந்து - எங்கும் வியாபிக்க
Kaalangal valam puri,காளங்கள் வலம் புரி - திருச்சின்னங்களையும் சங்கு களையும்
Isaithanar,இசைத்தனர் - ஊதினார்கள்
Vaal on kan madanthaiyar,வாள் ஒண் கண் மடந்தையர் - ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள்
Aazhiyaan thamar,ஆழியான் தமர் - “திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே!
Vaanagam aan mingal endru,வானகம் ஆண் மின்கள் என்று - இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி
Magizhnthu vaazhthinar,மகிழ்ந்து வாழ்த்தினர் - ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள்