| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3761 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மருத் கணங்களும் வஸீகணங்களும் தங்களுடைய எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்துவந்து தோத்திரம் செய்யும்படி சொல்லுகிறது) 7 | மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7 | Todukadal kidantha,தொடுகடல் கிடந்த - அகாதமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளின் Em Keshavan,எம் கேசவன் - எம்பெருமானாய் Kilar oli mani mudi,கிளர் ஒளி மணி முடி - கிளர்ந்தவொளியையுடைய ரத்னகிர்டத்தையணிந்த வனாய்க்கொண்டு Kudanthai,குடந்தை - திருக்குடத்தையிலே கண் வளர்ந்தருளுகிற Em Kovalan,எம் கோவலன் - எமது கோபாலனுக்கு Kudi adiyarkku,குடி அடியார்க்கு - குலங்குலமாக அடிமைப்பட்டவர்கள் விஷயத்திலே Madanthaiyar vaazhththalum,மடந்தையர் வாழ்த்தலும் - அப்ஸலஸ்ஸீக்கள் பல்லாண்டு பாடினவளவிலே Marutharum vasukkalum,மருதரும் வசுக்களும் - மருந்துக்களும் அஷ்டவசுக்களும் Engum todarndhu,எங்கும் தொடர்ந்து - போமிடமெங்கும் தொடர்ந்துவந்து Thothiram sollinar,தோத்திரம் சொல்லினர் - பல்லாண்டு பாடினார்கள் |