| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3762 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்திற்குப் புறம்பாக நீத்ய ஸூரிகள் இவர்களை எதிரிகொள்ளும்படி சொல்லுகிறது இப்பாட்டில்) 8 | குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8 | Ivar govindan thanukku kudi adiyar endru,இவர் கோவிந்தன் தனக்கு குடி அடியார் என்று - இவர்கள் பகவார்க்குக் குலங்குலமாக அடியவர்கள் என்று சொல்லி Mudi udai vaanavar,முடி உடை வானவர் - சேஷத்வத்துக்குச் சூடின முடியையுடைய நித்ய ஸூரிகள் Murai murai,முறை முறை - சிரமம் தப்பாமல் Edhirigolla,எதிரிகொள்ள - ‘ஸ்வாகதம்’ என்று சொல்லி யெதிரிகொண்டழைக்க Vadivu udai Maadhavan Vaikundam puga,வடிவு உடை மாதவன் வைகுந்தம் புக - அழகிய வடிவு படைத்த எம்பெருமானுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே பிரவேசிக்கைக்குறுப்பான Kodi ani netumadil,கொடி அணி நெடுமதிள் - அலங்ற்ரமாக வெடுத்துக் கட்டின கொடிகளையுடைய உயர்ந்த மதிளை யுடைத்தான Gopuram kuruginar,கோபுரம்குறுகினர் - தலைவாசலில் புகுந்தார்கள். |