Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3764 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3764திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நம்முடைய பரமபாக்கியமன்றோவென்று மீண்டும் சிலர்சொல்லத் தொடங்கினர்) 10
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10
Vidhi vakai puguṉnar endru,விதி வகை புகுந்னர் என்று - “நம்முடையபாக்யாநுகுணமாக இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தார்கள்” என்று சொல்லி
Nalvethiyar,நல்வேதியர் - நல்ல வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட நித்ய ஸூரிகள்
Pathiyinil,பதியினில் - தம்தம்திவ்யஸ்தானங்களிலே
Panginil,பாங்கினில் - உபசாரங்களுடனே
pathangal kazhuvinar,பாதங்கள் கழுவினர் - வந்தவர்களது திருவடிகளை விளக்கினார்கள்
Nidhiyum,நிதியும் - ஸ்ரீவைஷ்ணவர்க்குநிதியான திருவடி நிலைகளையும்
Nal sunnamum,நல் சுண்ணமும் - ஸ்ரீசூர்ணத்தையும்
Nirai kudam,நிறை குடம் - பூரண கும்பங்களையும்
Vilakkamum,விளக்கமும் - மங்கள தீபங்களையும்
Madhi mugam madandhaiyar,மதி முகம் மடந்தையர் - சந்திரன்போன்ற முகத்தை யுடையவர்களான பாரிசார்கைகள்
Vandhu yendhinar,வந்து ஏந்தினர் - ஏந்திக்கொண்டு எதிரே வந்தார்கள்