திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3765 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3765திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று. கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று) 11
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11
பதவுரை Show / Hide
Avar vandhu edhir kolla,அவர் வந்து எதிர் கொள்ள - அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து எதிரிகொள்ள
Mamani mandapathu,மாமணி மண்ட பத்து - திருமாமணி மண்டபத்திலே
Antham il perinpathu,அந்தம் இல் பேர் இன்பத்து - முடிவில்லாத மஹானந் தத்தை யுடைய
Adiyarodu,அடியரோடு - பரம்பாகவதர்களோடே கூடி
Kotthu alarpoliz kurukur sadagopan,கொத்து அலர்பொழில் குரு கூர் சடகோபன் - பூங்கொத்து அலருகிற சோர்லைகளை யுடைத்தான திருநகாரிக்குத் தலைவரான ஆழ்வார்
Sol,சொல் - அருளிச்செய்த
Sandhangalḷ ayirathu,சந்தங்;கள் ஆயிரத்து - வேதரூபமான ஆயிரம் பாசுரங்களில்
Ivai,இவை - இப்பத்துப் பாசுரங்களை
Vallar,வல்லார் - ஒதவல்லவர்கள்
Munivare,முனிவரே - பகவத்குணங்களை மனனம் பண்ணும் முனிவராவர்