Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3767 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3767திருவாய்மொழி || 10-10 முனியே (தம் காரியம் செய்தல்லது நிற்க வொண்ணாதபடி ஆணையிடுகிறாரிப்பாட்டில். ஒன்றும் மாயம் செய்யேலென்னையே என்று கீழ்ப்பாட்டில் சொன்னவுடனே எம்பெருமான் வந்து அபயமளிக்க வேணுமே, அது செய்யக் காணாமையாலே மீண்டும் மாயஞ்செய்யேலென்னை யென்கிறார்) 2
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2
என்னை மாயம் செய்யேல், ennai maayam seiyel - என் திறத்தில் வஞ்சனை பண்ணா தொழியவேணும்;
உன் திருமார் வத்து மாலை, Un thirumaar vathu maalai - உன்னுடையதிருமார் விலேசாத்திய மாலை போன்றவளாய்
நங்கை, Nangai - ஸகல குணபாரிபூர்ணையாய்
வாசம் செய்; பூ குழலாள், Vaasam sey; poo kuzhalaal - பரிமளம் மிக்க கூந்தலையுடையவளான
திரு ஆணை, Thiru aannai - பெரியபிராட்டியாணை:
நின் ஆணை, Nin aannai - உன் ஆணை
நேசம் செய்து, Nesam seydhu - தானாகவே ஸ்நேஹித்து
உன்னோடு, Unodu - உன்னோடே
என்னை, Ennai - நீசனான என்னை
உயிர் வேறு அன்றி, Uyir veru andri - ஆத்மபேத மில்லாமல்
ஒன்று ஆகவே, Ondru aagave - ஏக வஸ்துவாகவே
கூசம் செய்யாது, Koosam seiyaadhu - எனது தண்மையைப் பார்த்துக் கூசாமல்
கொண்டாய், Kondai - அடியேபிடித்து அங்கீகாரித்தருளினாய்;
என்னை வந்து கூவி கொள்ளாய் ennai vandhu koovi kollai - (ஆனபின்பு) இனி உபேகூஷியாதே என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளவேணும்.