Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3768 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3768திருவாய்மொழி || 10-10 முனியே (தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்) 3
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3
மேவி தொழும், mevi thozhum - விரும்பித் தொழுகின்ற
பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம், Biraman sivan indiran aadhiku ellaam - பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும்
முதல், mudhal - மூலநாரணமான
நாவி கமலம், naavi kamalam - திருநாபிக்கமலத்திற்கு
கிழங்கே, kizhange - இருப்பிடமானவனே!
ளும்பர்அந்ததுவே, lumbar andhadhuve - அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே!
ஆவிக்கு, aavikku - ஆத்மாவுக்கு
ஒர் பற்று கொம்பு, or patru kombu - ஓர் கொள்கொம்பு
நின் அலால், nin alaal - உன்னைத் தவிர
யான் அற்கின்றிலேன், yaan arkinrilen - நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய்.