| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3768 | திருவாய்மொழி || 10-10 முனியே (தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்) 3 | கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3 | மேவி தொழும், mevi thozhum - விரும்பித் தொழுகின்ற பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம், Biraman sivan indiran aadhiku ellaam - பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும் முதல், mudhal - மூலநாரணமான நாவி கமலம், naavi kamalam - திருநாபிக்கமலத்திற்கு கிழங்கே, kizhange - இருப்பிடமானவனே! ளும்பர்அந்ததுவே, lumbar andhadhuve - அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே! ஆவிக்கு, aavikku - ஆத்மாவுக்கு ஒர் பற்று கொம்பு, or patru kombu - ஓர் கொள்கொம்பு நின் அலால், nin alaal - உன்னைத் தவிர யான் அற்கின்றிலேன், yaan arkinrilen - நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய். |