| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3769 | திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார்.) 4 | உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4 | உம்பர்அம் தண் பாழேயோ, umparam than paazheyo - மூல ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனானவனே! அதனுள் மிசை நீயேயோ, adhanul misai neeyeyo - அந்தப்ரக்ருதிக்குள்ளே நிற்கிற ஆத்ம தத்வத்துக்கு நிர்வாஹகனானவனே! அம்பரம் நல்சோதி அதனுள் பிரமன் அரண் நீ, ambaram nalsothi adhanul biraman aran nee - ஆகாசம் முதலானவற்றுக்கும் அண்டத்துக்குள்ளேயிருக்கிற பிரமன் சிவன் முதலான வர்களுக்கும் நிர்வாஹன் நீ; உம்பரும் , umbarum - மேலான தேவர்களையும் யாதவரும்,yaathavarum - மநுஷ்யாதி ஸகலசேதநரையும் படைத்த முனிவன் அவன் நீ, padhaitha munivan avan nee - அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ; எம் பரம் சாதிக்கல் உற்று, em param saadhikkal utru - (இப்படியாயிருக்க) என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு என்னை போர விட்டிட்டாயே, enai pora vittitaaye - (இவ்வளவும் வர நிறுத்தி) என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே. |