| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3770 | திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வரகூஷகனாள நீ உபேகூஷித்தால் என்காரியம் நான் செய்யவோ? பிறர் செய்யவோ? நாளும் செய்;ய முடியாமல் பிறரும் செய்ய முடியாதபடி. யன்றோவிருப்பது; இனி முடிந்தேனத்தனையன்றோவென்கிறார்.) 5 | போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என் தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5 | இரும்பு, irumbu - காய்ச்சின இரும்பானது தீர உண்ட, theera unda - தன் காய்ச்சல் தீரும்படி உண்ட நீர் அது போல, neer athu pola - நீர் போல என் ஆர் உயிரை ஆர பருக, en aar uyirai aara paruka - என் ஆத்மாவின் விடாயெல்லாம் தீரப் பருகுகைக்கு எனக்கு ஆரா அமுது ஆனாயே, enakku ara amuthu anaaye - எனக்கு ஆராவமூதமா யிருக்கின்றாயே; நீ என்னை போர விட்டிட்டு, nee ennai pora vittittu - (இப்படியிருக்க) நீ என்னை அநாதாரித்து புறம் போக்கல் உற்றால், puram pokkal utraal - உபேகூஷித்துப் பொருட்டால் பின்னை, pinai - ஸர்வ சக்தியான நீயுமிப்படி கைவிட்டபின்பு யான், yaan - அசக்தனான நான் ஆரை கொண்டு, aarai kondu - எந்த உபாயத்தைக் கொண்டு எத்தை, yethai - எந்த புருஷார்த்தத்தை (ஸாதிப்பேன்!) அந்தோ, andho - ஜயோ! எனது என்பது என், enathu enbadhu en - என்னுடையதென்கைக்கு என்ன இருக்கிறது. யான் என்பது னுள், yaan enbadhu nul - நான் என்கைக்கு ஒரு ஸ்வதந்த்ர கர்த்தாவுண்டோ? |