| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3771 | திருவாய்மொழி || 10-10 முனியே (பெரிய பிராட்டியார்டத்திற்போலே என்னிடத்திலும் மிகுந்த அபிநிவேசம் கொண்டவனாய் எனது உடலிலுமுயிர்லும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ இனி யென்னை யுபேஷியாதே விரைவில் விஷயீகரித்தருளாயென்கிறார்) 6 | எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6 | புணம் க்ற்யா நிறத்த, punam kryaa niraththa - தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய் புண்டாரிகம் கண் செம் கனி வாய், puntaarikam kan sem kani vaai - தாமரைபோன்ற திருக்கண்ணையும் சிவந்த திருப்பவளத்தையுமுடையையான உனக்கு, unakku - உனக்கு ஏற்கும், erkum - ஏற்றிருக்கின்ற கோலம், kolam - வடிவு படைத்தவளான மலர்பாவைக்கு, malar paavaikku - பெரிய பிராட்டிக்கு அன்பா, anbaa - அன்பனே! என் அன்பே, en anbe - என் விஷயத்தில் அன்பு தானே வடிவெடுத்தாற் போன்றிருப்பவனே! எனக்கு ஆரா அமுது ஆய், enakku aara amudhu aay - எனக்குப் பரம போக்யனாய் எனது ஆவியை இன் உயிரை, enadhu aaviyai in uyirai - என்னுடைய ஹேயமான ப்ரக்ருதியையும் விலகூஷணனான ஆத்மாவையும் மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், manakku aaraamai manni undittai - இதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்: இனி உண்டொழியாய், ini undozhiyaai - குறையும் புஜித்தேயாக வேணும். |