Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3771 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3771திருவாய்மொழி || 10-10 முனியே (பெரிய பிராட்டியார்டத்திற்போலே என்னிடத்திலும் மிகுந்த அபிநிவேசம் கொண்டவனாய் எனது உடலிலுமுயிர்லும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ இனி யென்னை யுபேஷியாதே விரைவில் விஷயீகரித்தருளாயென்கிறார்) 6
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6
புணம் க்ற்யா நிறத்த, punam kryaa niraththa - தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டாரிகம் கண் செம் கனி வாய், puntaarikam kan sem kani vaai - தாமரைபோன்ற திருக்கண்ணையும் சிவந்த திருப்பவளத்தையுமுடையையான
உனக்கு, unakku - உனக்கு
ஏற்கும், erkum - ஏற்றிருக்கின்ற
கோலம், kolam - வடிவு படைத்தவளான
மலர்பாவைக்கு, malar paavaikku - பெரிய பிராட்டிக்கு
அன்பா, anbaa - அன்பனே!
என் அன்பே, en anbe - என் விஷயத்தில் அன்பு தானே வடிவெடுத்தாற் போன்றிருப்பவனே!
எனக்கு ஆரா அமுது ஆய், enakku aara amudhu aay - எனக்குப் பரம போக்யனாய்
எனது ஆவியை இன் உயிரை, enadhu aaviyai in uyirai - என்னுடைய ஹேயமான ப்ரக்ருதியையும் விலகூஷணனான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், manakku aaraamai manni undittai - இதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்:
இனி உண்டொழியாய், ini undozhiyaai - குறையும் புஜித்தேயாக வேணும்.