| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3772 | திருவாய்மொழி || 10-10 முனியே (பிரளயார்ணவத்திலே மூழ்கியிருந்த ஸ்ரீ பூமிப்பிராட்டியை யெடுத்து அவளோடே கலந்தாப்போலேயும், கடலைக்கடைந்து பிராட்டியோடே ஸம்ச்லேஷித்தாப்போலேயும் பிராட்டி பாரிக்ரஹமானவென்னை ஸம்ஸார ஸாகரத்தில் நின்று மெடுத்து என் பக்கலிலே மிகவும் வியாமோஹங் கொண்டிருக்கிறவுன்னைப் பெற்றுவைத்து இனித் தப்பவிடுவனோவென்கிறார்) 7 | கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7 | கோலம் மலர்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ, kolam malarpaavaikku anbu aagiya en anbeyo - பெரிய பிராட்டியார்க்கு உகப்பானவத்தாலே அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்புசெய்யுமவனே! நீலம் வரை, neelam varai - நீலமணி மலை யொன்று இரண்டு பிறை கவ்வி, irandu pirai kavvi - இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தது ஒப்ப, nimirndhadhu oppa - எழுந்திருந்தாற் போலே கோலம் வராகம் ஒன்று ஆய், kolam varaagam ondru aai - எழுந்திருந்தாற் போலே விலகூஷணமான அத்விதீய மஹா வராஹமாய் நிலம், nilam - பூமியை கோடு இடை கொண்ட, kodu idai konda - எயிற்றிலே கொண்டெடுத்த எந்தாய், endhaai - எம்பெருமானே! நீலம் கடல் உடைந்தாய், neelam kadal udaindhaai - உனது திருமேனி நிழலிட்டாலே நீலமான கடலைக் கடைந்து அமுத மளித்தவனே! உன்னை பெற்று, unnaai petru - உன்னைப் புகலாகப் பெற்று வைத்து இனி போக்குவனோ, ini pokkuvano - கைபுகுந்த பின்பு நழுவ விடுவேனோ! |