Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3773 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3773திருவாய்மொழி || 10-10 முனியே (மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார்.) 8
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8
உயிர் ஆய், uyir aay - கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய்
பயன் அவை ஆய், payan avai aay - கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு
இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய், im moovulagum mutra peruthooru aay - இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய்
தூற்றில் புக்கு, thootril pukku - இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து
முற்ற கரந்து ஒளித்தாய், mutra karandhu oliththai - ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய்
என் முதல் தனி வித்தே ஓ, en mudhal thani vithe o - எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே!
என் தனிபேர் உயிரை உன்னை , en thaniper uyirai unnai - எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை
பெற்று இனி போக்குவனோ , petru ini pokkuvano - பெற்று வைத்து இனி விடுவேனோ!