| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3774 | திருவாய்மொழி || 10-10 முனியே (நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில் எனக்கு அதுவே அமையாது – நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் ) 9 | முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய் முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9 | முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம், muzhu moo ulagu aadhikku ellaam - மூவுலகு தொடக்கமான எல்லாவற்றுக்கும் முதல் தனி வித்தே ஓ, mudhal thani vithe o - முவகைக் காரணமுமானவனே! அங்கும் இங்கும் முழு முற்று உறு, angum ingum muzhu mutru uru - எங்கும் ஸமஸ்த பதார்ததிருப்பதாய் முதல் தனி, mudhal thani - அத்விதீய காரணமாய் வாழ், vaazh - போதமோகூஷங்களாகிற வாழ்ச்சிக்கு பாழ் ஆய், paazh aay - விளை நிலமான முல ப்ரக்ருதிக்கு நியாமகனாய் முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து ஒயர்ந்த முடிவு இலீ ஓ, mudhal thani soozhndhu agandru aazhndhu oyarndha mudivu ilee o - பு;ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு நியாமகமாய் ஒப்பற்றதாய் தர்ம பூதஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்ததாய் நித்யமான ஆத்மவர்க்கத்துக்கு நியாமகனானவனே! முதல் தனி உன்னை, mudhal thani unnai - முதல்வனாயும் அத்விதீயனாயுமிருக்கிற உன்னை உன்னை, unnai - அஸாதரணனானஷன வுன்ளை நான் என்னை நாள் வந்து கூடுவன், naan ennai naal vandhu kooduvan - நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்! |