Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3775 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3775திருவாய்மொழி || 10-10 முனியே (பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார்.) 10
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த, Soozhndhu Agandru Aazhndhu Uyarndha - பத்து திக்கிலும் வ்யாப்தமாய்
முடிவு இல், Mudivu il - நித்யமாயிருக்கிற
பெரு பாழே ஓ, Peru Paazhe O - ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே!
சூழ்ந்து, Soozhndhu - (தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து
அதனில் பெரிய, Adhanil Periya - அதற்காட்டிலும் பெரியதாய்
பரம், Param - மேற்பட்டதாய்
நல்மலர்சோதீ ஒ, Nal Malarsodhi O - வகஸ்வர தேஜோரூபமான ஆத்ம வஸ்துவுக்கும் ஆத்மாவானவனே!
சூழ்ந்து, Soozhndhu - கீழ்ச் சொன்ன இரண்டு தத்வங்களையும் வியாபித்து அகற்றுக்கும் நிர்வாஹகமாய்
சுடர் ஞானம் இன்பமே ஓ, Sudar Gnanam Inbame O - ஙை;கல்ப பமாய் ஸூகரூபமான ஞானத்தை யுடையவனே!
சூழ்ந்து, Soozhndhu - அந்த தத்வத்ரயத்தையும் வளைத்துக்கொண்டு
அதனில் பெரிய, Adhanil Periya - அதிலும் மிகப் பெரிதான
என் அவா, En Avaa - என் அபிநிலேசமானது
அற, Ara - தீரும்படியாக
சூழ்ந்தாயே, Soozhndhaye - வந்து ஸம்ச்லேஷித்தாயே!