Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3776 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3776திருவாய்மொழி || 10-10 முனியே (பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி தசைகளென்று மூன்றுண்டே; சூழ்விசும்பணி முகிலுக்கு முன்வரையில் பரபக்தி தசையாய்ச் சென்றது. சூழ்விசும்பணி முகில் திருவாய் மொழியானது பரஜ்ஞான தசையிற் சென்றது. முனியே நான்முகனே யென்கிற இத்திருவாய் மொழியானது பரமபக்தி தசையிற் சென்றது. பரமபக்திக்கே ‘முடிந்த அவா’ என்று பெயர். இப்படிப்பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள் இவ்விருள் தருமா ஞாலத்திற் பிறந்து வைத்தே ‘நித்ய ஸூரிகளேயிவர்கள் என்னும்படியான பெருமையோடே பொலிவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11
அவா அற, Ava Ara - அடியேனுடைய அபிநி வேசம் தீரும்படி
சூழ், Soozh - ஸம்ச்லேஷிப்பவனாய்
அர்யை, Aryai - இப்படி தாபத்தை ஹாரிப்பவனாகையாலே ஹாரியென்று திருநாமம் பெற்றவானாய்
அயனை, Ayanai - பிரமனுக்கு அந்தரியாமியாய்
அரணை, Aranai - ருத்ரனுக்கு அந்தரியாமியாய்யிருக்கிற எம்பெருமானை
அலற்றி, Alatri - கூப்பிட்டு
அவா அற்று வீடு பெற்ற, Ava Attru Veedu Petra - ஆசை தீர்ந்து வீடு பெற்ற வாரன
குருகூர் சடகோ பன், Kurukoor Sadagoban - நம்மாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்ததாய்
அவாவில், Avaavil - பக்தியினா லுண்டானதான
அந்தா திகளால், Antha thigalaal - அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த
இவை ஆயிரமும், Ivai Aayiramum - இவ்வாயிரத்தினுள்ளே
முடிந்த அவாவில், Mudintha Avavil - பரம பக்தியாலே பிறந்ததான
அந்தாதி, Anthaathi - அந்தாதியான
இப்பத்து, Ippathu - இப்பதிகத்தை
அறிந்தார், Arindhaar - அறியக் கற்குமவர்கள்
பிறந்தே உயர்ந்தார், Pirandhe Uyarndhar - ஸம்ஸாரத்தில் பிறந்தருக்கச் செய்தேயும் உயர்ந்த வர்களாவர்