திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3777 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3777இராமாநுச நூற்றந்தாதி || 1
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே
பதவுரை Show / Hide
நெஞ்சே!, Nenje - ஓ மனமே!
பூ மன்னு மாது, Poo Mannu Maathu - தாமரைப் பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி
பொருந்திய மார்பன், Porundhiya Maarban - (அப் பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையை யுடைய  திருமார்பை யுடையனான பெருமானுடைய
புகழ் மலிந்த பா, Pugazh Malintha Paa - திருக் கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே
மன்னு மாறன், Mannu Maaran - ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய
அடி, Adi - திருவடிகளை
பணிந்து, Panindhu - ஆச்ரயித்து
உய்ந்தவன், Uyndhavan - உஜ்ஜீவித்தவரும்
பல் கலையோர் தாம் மன்ன வந்த, Pal Kalaiyore Thaam Mann Vantha - ஓதின மஹான்கள் நிலை பெறும்படி (இவ் வுலகில்) வந்தவதரித்த வருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானுடைய
சரணாரவிந்தம், Saranaravindham - திருவடித் தாமரைகளை
நாம் மன்னி வாழ, Naam Manni Vaazha - நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக
அவன் நாமங்களே, Avan Naamangalye - அவ் வெம்பெருமானாரது திருநாமங்களையே
சொல்லுவோம், Solluvoam - ஸங்கீர்த்தநம் பண்ணுவோம்