திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3778 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3778இராமாநுச நூற்றந்தாதி || 2
கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற் கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே
பதவுரை Show / Hide
கள் ஆர் பொழில் தென் அரங்கன், Kal Aar Pozhil Then Arangan - தேன் நிறைந்த சோலைகளை யுடைய தென் திருவரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெருமானுடைய
கமலம் பாதங்கள், Kamalam Paathangal - தாமரை போன்ற திருவடிகளை
நெஞ்சில் கொள்ளா, Nenjin Kollaa - தமது நெஞ்சிலே வையாத
மனிசரை நீங்கி, Manisarai Neengi - மனிதர்களை விட்டொழித்து,
குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன், Kuraiyal Piraan Adi Keezh Villadha Anban - திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியை யுடையரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
மிக்க சீலம் அல்லால், Mikka Seelam Allaal - சிறந்த சீல குணத்தைத் தவிர
ஒன்று, Onru - வேறொன்றையும்
என் நெஞ்சு உள்ளாது, En Nenju Ulladhu - எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது;
எனக்கு உற்ற பேர் இயல்வு, Enakku Utra Peer Iyavvu - எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு
ஒன்று அறியேன், Onru Ariyeen - ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன்.