திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3779 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3779இராமாநுச நூற்றந்தாதி || 3
பேரியல் நெஞ்சே! அடி பணிந் தேனுன்னைப் பேய்ப் பிறவிப் பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொரு வருஞ்சீர் ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்பு செய்யும் சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே
பதவுரை Show / Hide
பேர்இயல் நெஞ்சே!, Peeriyal Nenjee - மிகவும் கம்பீரமான மனமே!
உன்னை அடிபணிந்தேன், Unnai Adhipanindhen - உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்;
பேய் பிறவி, Pei Piravi - ஆஸுரப் பிறப்பை யுடையவர்களான
பூரியரோடு உள்ள சுற்றம், Pooviyarodu Ulla Suttam - நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை
புலர்த்தி, Pularthi - போக்கடித்து
பொருவு அரு சீர், Poruvu Aru Seer - ஒப்பற்ற குணங்களை யுடையவரும்
ஆரியன், Aariyan - சிறந்த அநுஷ்டாக முடையவரும்
செம்மை, Semmai - (ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான
இராமாநுச முனிக்கு, Iramanusa Munikku - எம்பெருமானார் திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு
உடையார், Udaiyar - பக்தி பண்ணுவதையே  பரம புருஷார்க்தமாக வுடையவர்களான  கூரத்தாழ்வான் போல்வாருடைய
அடிக் கீழ், Adik Keel - திருவடிகளின் கீழே
என்னை, Ennai - (பரம நீசனாயிருந்த) என்னை
சேர்த்ததற்கே, Sertthatharkae - கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்)