திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3779 | இராமாநுச நூற்றந்தாதி || 3 | பேரியல் நெஞ்சே! அடி பணிந் தேனுன்னைப் பேய்ப் பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொரு வருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்பு செய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே | பதவுரை Show / Hideபேர்இயல் நெஞ்சே!, Peeriyal Nenjee - மிகவும் கம்பீரமான மனமே! உன்னை அடிபணிந்தேன், Unnai Adhipanindhen - உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்; பேய் பிறவி, Pei Piravi - ஆஸுரப் பிறப்பை யுடையவர்களான பூரியரோடு உள்ள சுற்றம், Pooviyarodu Ulla Suttam - நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை புலர்த்தி, Pularthi - போக்கடித்து பொருவு அரு சீர், Poruvu Aru Seer - ஒப்பற்ற குணங்களை யுடையவரும் ஆரியன், Aariyan - சிறந்த அநுஷ்டாக முடையவரும் செம்மை, Semmai - (ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான இராமாநுச முனிக்கு, Iramanusa Munikku - எம்பெருமானார் திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு உடையார், Udaiyar - பக்தி பண்ணுவதையே பரம புருஷார்க்தமாக வுடையவர்களான கூரத்தாழ்வான் போல்வாருடைய அடிக் கீழ், Adik Keel - திருவடிகளின் கீழே என்னை, Ennai - (பரம நீசனாயிருந்த) என்னை சேர்த்ததற்கே, Sertthatharkae - கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்) |