திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3780 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3780இராமாநுச நூற்றந்தாதி || 4
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேரறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமுமென் சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே
பதவுரை Show / Hide
ஊழி முதல்வனையே, Oozhi Muthalvanaiye - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம் பெருமானையே
பன்ன, Panna - (எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி
பணித்த, Paniththa - (ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
பரன் இராமாநுசன், Paran Iramanusan - ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்
புவியில், Puviyil - இந்தப் பூமியிலே
என்னை ஒரு பொருள் ஆக்கி, Ennai Oru Porul Aakki - (அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி
மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து, Marul Surandha Munnai Pazhai Vinai Veer Aruththu - அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி
பாதமும், Paadhamum - தமது திருவடிகளையும்
என் சென்னி, En Chenni - எனது தலையிலே
தரிக்க வைத்தான், Tharikka Vaiththaan - நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹா ப்ரஸாதம் பெற்றோனான பின்பு)
எனக்கு, Enakku - அடியேனுக்கு
ஏதும் சிதைவு இல்லை, Aedhum Sithaivu Illai - எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.