திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3781 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3781இராமாநுச நூற்றந்தாதி || 5
எனக்குற்ற செல்வம் இராமானுச னென்று இசைய கில்லா மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா இனக் குற்றம் காண கில்லார், பத்தி ஏய்ந்த இயல்வி தென்றே
பதவுரை Show / Hide
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று, Enakku Utra Selvam Iramanusan Endru - ‘நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து எம்மெருமானாரே’ என்று
இசைய கில்லா, Isaiya Killa - அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத
மனக் குற்றம் மாந்தர், Manak Kutram Manthar - துஷ்ட ஹ்ருதயர்களான மனிசர்
பழிக்கில், Pazhikkil - (இந்நூலைப்) பழிப்பவர்களானால்
புகழ், Pugazh - (அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய் விடும்;
அவன், Avan - அவ்வெம்பெருமானாருடைய
மன்னிய சீர் தனக்கு, Manniya Seer Thanakku - நித்ய ஸித்தமான கல்யாண குணங்களுக்கு
உற்ற, Utra - தகுதியான
அன்பர், Anbar - தகுதியான அன்பை யுடையவர்களான மஹான்கள்
பத்தி ஏய்ந்த இயல் விது என்று, Pathi Aeyndha Iyala Vidhu Endru - இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியை யுடையதென்று (திருவுள்ளம் பற்றி)
அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார், Avan Thirunamagal Saatrum En Paa Inam Kutram Kaanagillaar - அவ்விராமாநுசனுடைய திரு நாமங்களைக் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசுர மாலைகளிலுள்ள குற்றங்களைக் காண மாட்டார்கள்.