திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3782 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3782இராமாநுச நூற்றந்தாதி || 6
இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால் பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால் முயல்கின்றனன் அவன் றன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே
பதவுரை Show / Hide
ஈன் கவிகள், Een Kavigal - விலக்ஷணரான கவிகள்
அன் பால், An Paal - ப்ரீதியினாலே
இயலும் பொருளும், Iyalaum Porulum - சப்தமும் அர்த்தமும்
இசைய, Isaiya - நன்கு பொருந்தும் படியாக
தொடுத்து, Thoduthu - கவனம் பண்ணி பாடல்களிலே
பக்தி இல்லாத, Bhakti Illadha - பக்தியற்றதான
என் பாவி நெஞ்சால், En Paavi Nenjaal - என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே
அவன் தன், Avan Than - அவ்வெம்பெருமானாருடைய
மயல், Mayal - வ்யாமோஹம் தலையெடுத்து
வாழ்த்தும் இராமானாசனை பயிலும், Vaazhthum Iraamaanachanaip Payilum - துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற
பெரு கீர்த்தி, Peru Keerthi - அளவற்றகீர்த்திகளை
மொழிந்திட, Mozhindida - பேசுவதாக
மதி இன்மையால் முயல்கின்றன, Mathi Inmaiyaal Muyalginthana - புத்தி யில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன்.