திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3783 | இராமாநுச நூற்றந்தாதி || 7 | மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே. | பதவுரை Show / Hideமொழியை கடக்கும், Mozhiyai Kadakkum - வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி வாசா மகோசரமான பெரு புகழான், Peru Pugazhaan - பெரிய புகழை யுடையவரும் முக் குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும், Muk Kurumbu Aam Vanjak Kuzhiyai Kadakkum - கல்விக் செருக்கு, செல்வச் செருக்கு குலச் செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படு குழியைக் கடந்திருப்பவரும் நம், Nam - நமக்கு நாதருமான கூரத்து ஆழ்வான், Kooraathu Azhvaan - கூரத்தாழ்வானாடைய சரண், Saran - திருவடிகளை கூடிய பின், Koodiya Pin - நான் ஆச்ரயித்த பின்பு பழியை கடத்தும், Pazhaiyai Kadaththum - ஸர்வபாப நிவர்த்தகரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய புகழ் பாடி, Pugazh Paadi - நற் குணங்களைப் பாடி அல்லா வழியை கடத்தல், Allaa Vazhaiyai Kadaththal - ஸ்வரூபத்திற்குச் சேராத தீய வழிகளைத் தப்பிப் பிழைக்கையான எனக்கு, Enakku - அடியேனுக்கு இனி, Ini - இனி மேலுள்ள கால மெல்லாம் யாதும் வருத்தம் அன்று, Yaadum Varuththam Andru - ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்) |