திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3783 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3783இராமாநுச நூற்றந்தாதி || 7
மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.
பதவுரை Show / Hide
மொழியை கடக்கும், Mozhiyai Kadakkum - வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி வாசா மகோசரமான
பெரு புகழான், Peru Pugazhaan - பெரிய புகழை யுடையவரும்
முக் குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும், Muk Kurumbu Aam Vanjak Kuzhiyai Kadakkum - கல்விக் செருக்கு, செல்வச் செருக்கு குலச் செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படு குழியைக் கடந்திருப்பவரும்
நம், Nam - நமக்கு நாதருமான
கூரத்து ஆழ்வான், Kooraathu Azhvaan - கூரத்தாழ்வானாடைய
சரண், Saran - திருவடிகளை
கூடிய பின், Koodiya Pin - நான் ஆச்ரயித்த பின்பு
பழியை கடத்தும், Pazhaiyai Kadaththum - ஸர்வபாப நிவர்த்தகரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
புகழ் பாடி, Pugazh Paadi - நற் குணங்களைப் பாடி
அல்லா வழியை கடத்தல், Allaa Vazhaiyai Kadaththal - ஸ்வரூபத்திற்குச் சேராத தீய வழிகளைத் தப்பிப் பிழைக்கையான
எனக்கு, Enakku - அடியேனுக்கு
இனி, Ini - இனி மேலுள்ள கால மெல்லாம்
யாதும் வருத்தம் அன்று, Yaadum Varuththam Andru - ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்)