திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3784 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3784இராமாநுச நூற்றந்தாதி || 8
வருத்தும் புற விருள் மாற்ற, எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்தன் றெரித்த திரு விளக் கைத் தன் திருவுள்ளத்தே இருத்தும் பரமன் இராமானுச னெம் இறையவனே
பதவுரை Show / Hide
வருத்தும், Varuththum - வருத்தத்தை யுண்டு பண்ணக் கூடிய பாஹ்ய விஷயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை
மாற்ற, Maatra - போக்குவதற்காக
எம் பொய்கைப்பிரான், Em Poigai Piraan - நமது குலத் தலைவரான பொய்கை யாழ்வார்
அன்று, Andru - முற் காலத்தில்
மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து, Maraiyin Kuruththin Porulaiyum Senthamizh Thannaiyum Kootti Ondra Thiriththu - வேதாந்தங்களிற் பதிந்து கிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங்கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒருதிரியாக்கி
எரித்த திரு விளக்கை, Eritha Thiru Vilakkai - ஜ்வலிக்கக் செய்த (முதல் திருவந்தாதி யாகிற) திருவிளக்கை
தன் திரு உள்ளத்தே, Than Thiru Ullaththae - தமது திருவுள்ளத்தே
இருத்தும், Iruththum - வைத்துக் கொண்டிரா நின்ற
பரமன் இராமாநுசன் எம் இறையவன், Paraman Iraamaanusan Em Iraivan - மஹா வைபவசாலியான எம்பெருமானார்
எம் இறையவன், Em Iraivan - நமக்கு ஸ்வாமி