திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3785 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3785இராமாநுச நூற்றந்தாதி || 9
இறைவனைக் காணும் இதயத் திருள் கெட ஞான மென்னும் நிறை விளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத் துறைய வைத் தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் மறையினைக் காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே
பதவுரை Show / Hide
இறைவனை, Iraivanai - ஸரவ ஸ்வாமியான எம் பெருமானை
காணும், Kaanum - ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான
இதயத்து, Idhayaththu - ஹ்ருயத்திலுள்ள
இருள் கெட, Irul Keda - அஜ்ஞாநமாகிற அந்தகாரமானது நசிக்கும்படியாக
ஞானம் என்னும் நிறை விளக்கு எற்றிய, Gyaanam Ennum Nirai Vilakku Ettriya - ஞானமாகிற பூர்ண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளி இரண்டாந் திருவந்தாதியை அருளிச்செய்த
பூதத் திருவடி, Puthath Thiruvadi - பூதத்தாழ்வாருடைய
தாள்கள், Thaalgal - திருவடிகளை
நெஞ்சத்து, Nenchatthu - தமது திருவுள்ளத்திலே
உறைய வைத்து, Uray Vaitthu - சாச்வதமாக ஸ்தாபித்து
ஆளும், Aalum - (அவற்றையே) அநுபவிக்கின்ற
இராமானுசன், Iraamanusan - எம்பெருமானாருடைய
புகழ், Pugazh - திவ்ய குணங்களை
ஒதும், Odhum - இடைவிடாது அநுஸந்திக்கின்ற
நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்கள் தாம்
இந்த மண் அகத்தே, Indha Mann Agatthae - இப் பூ மண்டலத்திலே
மறையினை, Maraiyinai - வேதங்களை
காத்து, Kaathu - ரக்ஷித்து
மன்ன வைப்பவர், Manna Vaippavar - என்றைக்கும் அழிவில்லாதபடி ப்ரதிஷ்டாபனம் பண்ண வல்லவர்கள்