திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3785 | இராமாநுச நூற்றந்தாதி || 9 | இறைவனைக் காணும் இதயத் திருள் கெட ஞான மென்னும்
நிறை விளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறைய வைத் தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே | பதவுரை Show / Hideஇறைவனை, Iraivanai - ஸரவ ஸ்வாமியான எம் பெருமானை காணும், Kaanum - ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான இதயத்து, Idhayaththu - ஹ்ருயத்திலுள்ள இருள் கெட, Irul Keda - அஜ்ஞாநமாகிற அந்தகாரமானது நசிக்கும்படியாக ஞானம் என்னும் நிறை விளக்கு எற்றிய, Gyaanam Ennum Nirai Vilakku Ettriya - ஞானமாகிற பூர்ண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளி இரண்டாந் திருவந்தாதியை அருளிச்செய்த பூதத் திருவடி, Puthath Thiruvadi - பூதத்தாழ்வாருடைய தாள்கள், Thaalgal - திருவடிகளை நெஞ்சத்து, Nenchatthu - தமது திருவுள்ளத்திலே உறைய வைத்து, Uray Vaitthu - சாச்வதமாக ஸ்தாபித்து ஆளும், Aalum - (அவற்றையே) அநுபவிக்கின்ற இராமானுசன், Iraamanusan - எம்பெருமானாருடைய புகழ், Pugazh - திவ்ய குணங்களை ஒதும், Odhum - இடைவிடாது அநுஸந்திக்கின்ற நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்கள் தாம் இந்த மண் அகத்தே, Indha Mann Agatthae - இப் பூ மண்டலத்திலே மறையினை, Maraiyinai - வேதங்களை காத்து, Kaathu - ரக்ஷித்து மன்ன வைப்பவர், Manna Vaippavar - என்றைக்கும் அழிவில்லாதபடி ப்ரதிஷ்டாபனம் பண்ண வல்லவர்கள் |