திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3786 | இராமாநுச நூற்றந்தாதி || 10 | மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற் கன்பு பூண்டவர் தாள்
சென்னியிற் சூடும் திரு வுடையா ரென்றும் சீரியரே | பதவுரை Show / Hideமன்னிய, Manniya - ஒருவாரலும் பேர்க்க முடியாத படியாதபடி நிலைத்து நின்ற பேர் இருள், Pera Irul - (அஜ்ஞாநமாகிற பெருத்த இருளானது மாண்ட பின், Maanda Pin - முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திரு விளக்காலே) நனறாக நீங்கின பின்பு, கோவலுள் ஆயனை, Kovalul Aayanai - திருக் கோவலூரில் ஆயனாரை மா மலராள் தன்னொடும், Maa Malaraal Thannodum - பிராட்டியோடு கூட கண்டமை, Kandamai - தாம் ஸேவித்த படியை காட்டும், Kaattum - “திருக் கண்டேன்” இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட்டருளி தமிழ் தலைவன், Tamizh Thalaivan - தமிழ்க்குத் தலைவரான பேயாழ்வாருடைய பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை போற்றும், Poatrum - புகழுமவரான இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார் திறத்தில் அன்பு பூண்டவர், Anbu Poondavar - பக்தியை யுடையவர்களினது தாள், Thal - திருவடிகளை சென்னியில் சூடும் திரு உடையார், Chennaiyil Soodum Thiru Udaiyar - சிரோ பூஷணமாகக் கொள்ளுஞ் செல்வ முடையோர் தாம் என்றும் சீரியா என்றைக்கும் ஸ்ரீமான்கள். |