திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3786 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3786இராமாநுச நூற்றந்தாதி || 10
மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசற் கன்பு பூண்டவர் தாள் சென்னியிற் சூடும் திரு வுடையா ரென்றும் சீரியரே
பதவுரை Show / Hide
மன்னிய, Manniya - ஒருவாரலும் பேர்க்க முடியாத படியாதபடி நிலைத்து நின்ற
பேர் இருள், Pera Irul - (அஜ்ஞாநமாகிற பெருத்த இருளானது
மாண்ட பின், Maanda Pin - முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திரு விளக்காலே) நனறாக நீங்கின பின்பு,
கோவலுள் ஆயனை, Kovalul Aayanai - திருக் கோவலூரில் ஆயனாரை
மா மலராள் தன்னொடும், Maa Malaraal Thannodum - பிராட்டியோடு கூட
கண்டமை, Kandamai - தாம் ஸேவித்த படியை
காட்டும், Kaattum - “திருக் கண்டேன்” இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட்டருளி
தமிழ் தலைவன், Tamizh Thalaivan - தமிழ்க்குத் தலைவரான பேயாழ்வாருடைய
பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை
போற்றும், Poatrum - புகழுமவரான
இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார் திறத்தில்
அன்பு பூண்டவர், Anbu Poondavar - பக்தியை யுடையவர்களினது
தாள், Thal - திருவடிகளை
சென்னியில் சூடும் திரு உடையார், Chennaiyil Soodum Thiru Udaiyar - சிரோ பூஷணமாகக் கொள்ளுஞ் செல்வ முடையோர் தாம் என்றும் சீரியா என்றைக்கும் ஸ்ரீமான்கள்.