திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3787 | இராமாநுச நூற்றந்தாதி || 11 | சீரிய நான்மறைச் செம் பொருள் செந் தமிழாலளித்த
பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள்,சரணாம் பதுமத்
தாரியல் சென்னி இராமானுசன்றனைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை, என்னால் சொல் லொணா திக் கடலிடத்தே | பதவுரை Show / Hideசீரிய நால்மறை செம் பொருள், Seeriya Naalmarai Sem Porul - சிறந்த நால் வேதங்களிலுள்ள செவ்விய பொருள்களை செம் தமிழால், Sem Tamizhal - அழகிய தமிழ்ப்பாசுரங்களினால் அளித்த, Alitha - அருளிச் செய்தவரும் சரணாம் பதுமம் தார் இயல் சென்னி, Saranam Pathumam Thar Iyala Chennai - திருவடிகளாகிற தாமரைப் பூவாலே அலங்கரிக்கப் பட்ட திரு முடியை யுடையரான இராமாநுசன் தன்னை, Iramanusan Thannai - எம்பெருமானாரை சார்ந்தவர் தம், Sarnthavar Tham - ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய பார் இயலும் புகழ், Par Iyalaum Pugazh - பூமி யெங்கும் பொருந்தின புகழை யுடையவருமான பாண் பெருமாள், Pan Perumal - திருப் பாணாழ்வாருடைய காரியம் வண்மை, Kaariyam Vanmai - அநுஷ்டாந வைலக்ஷண்யமானது இக் கடல் இடத்து, Ik Kadal Idathu - கடல் சூழ்ந்த இப் பூமியில் என்னால் சொல்ல ஒணுது, Ennal Solla Onuthu - (இப்படிப்பட்ட வைபவ முடையதென்று) என்னால் சொல்லித் தலைக் கட்ட முடியாதது. |