திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3787 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3787இராமாநுச நூற்றந்தாதி || 11
சீரிய நான்மறைச் செம் பொருள் செந் தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள்,சரணாம் பதுமத் தாரியல் சென்னி இராமானுசன்றனைச் சார்ந்தவர் தம் காரிய வண்மை, என்னால் சொல் லொணா திக் கடலிடத்தே
பதவுரை Show / Hide
சீரிய நால்மறை செம் பொருள், Seeriya Naalmarai Sem Porul - சிறந்த நால் வேதங்களிலுள்ள செவ்விய பொருள்களை
செம் தமிழால், Sem Tamizhal - அழகிய தமிழ்ப்பாசுரங்களினால்
அளித்த, Alitha - அருளிச் செய்தவரும்
சரணாம் பதுமம் தார் இயல் சென்னி, Saranam Pathumam Thar Iyala Chennai - திருவடிகளாகிற தாமரைப் பூவாலே அலங்கரிக்கப் பட்ட திரு முடியை யுடையரான
இராமாநுசன் தன்னை, Iramanusan Thannai - எம்பெருமானாரை
சார்ந்தவர் தம், Sarnthavar Tham - ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய
பார் இயலும் புகழ், Par Iyalaum Pugazh - பூமி யெங்கும் பொருந்தின புகழை யுடையவருமான
பாண் பெருமாள், Pan Perumal - திருப் பாணாழ்வாருடைய
காரியம் வண்மை, Kaariyam Vanmai - அநுஷ்டாந வைலக்ஷண்யமானது
இக் கடல் இடத்து, Ik Kadal Idathu - கடல் சூழ்ந்த இப் பூமியில்
என்னால் சொல்ல ஒணுது, Ennal Solla Onuthu - (இப்படிப்பட்ட வைபவ முடையதென்று) என்னால் சொல்லித் தலைக் கட்ட முடியாதது.