திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3788 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3788இராமாநுச நூற்றந்தாதி || 12
இடங் கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ தடங்கும் இதயத் திராமானுசன்,அம் பொற் பாத மென்றுங் கடங் கொண் டிறைஞ்சும் திரு முனிவர்க் கன்றிக் காதல் செய்யாத் திடங் கொண்ட ஞானியர்க்கே அடியே னன்பு செய்வதுவே
பதவுரை Show / Hide
இடம் கொண்ட கீர்த்தி, Idam Konda Keerthi - பூமி யெங்கும் வியாபித்த கீர்த்தியை யுடையரான
மழிசைக்கு இறைவன், Mazhisaiyukku Iraivan - திரு மழிசைப் பிரானாடைய
இணை அடி போது, Inai Adi Podhu - உபய பாதார விந்தங்கள்
அடங்கும், Adangum - குடி கொண்டிருக்கப் பெற்ற
இதயத்து, Idhayaththu - திரு வுள்ளத்தை யுடையரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாடைய
அம் பொன் பாதம் என்றும், Am Pon Paatham Endrum - மிகவும் அழகிய திருவடிகளை
என்றும், Endrum - எக் காலத்திலும்
கடம் கொண்டு இறைஞ் சும் திரு, Kadham Kondu Irainchum Thiru - இதுவே நமக்கு ஸ்வரூப மென்கிற புத்தியோடே ஆச்ரயிக்கையாகிற செல்வத்தை யுடையரான
முனிவர்க்கு அன்றி, Munivarkku Andri - மஹான்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு
காதல் செய்யா, Kaadhal Seyyaa - அன்பு பூண்டிரா
திடங் கொண்ட ஞானியாக்கே, Thidang Konda Gnaaniyagke - மிக்க உறுதியை யுடையரான ஞானிகளுக்குத் தான்
அடியேன் அன்பு செய்வது, Adiyean Anbu Seyvathu - அடியேன் பக்தனாயிருப்பேன்