திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3790 | இராமாநுச நூற்றந்தாதி || 14 | கதிக்குப் பதறி வெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை யற்றேன்,கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுச னென்னைச் சோர்விலனே | பதவுரை Show / Hideகொல்லி காவலன், Kolli Kavalan - குல சேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப் பட்டதாய் கலை சொல் பதிக்கும், Kalai Sol Pathikkum - சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான பொருமாள் திருமொழிப் பரசுரங்களை பாடும் பெரியவர், Padum Periyavar - பாடுகின்ற பெரியோர்களது பாதங்களே, Padangale - திருவடிகளையே துதிக்கும், Thuthikkum - ஸ்தோத்ரம் செய்பவராய் பரமன், Paraman - உத்க்ருஷ்டரான இராமானுசன், Iraamanusan - எம்பெருமானார் என்னை சோர்விலன், Ennai Sorvilan - என்னை விட்டு நீங்குகிறாரில்லை; (ஆதலால்) ப்ராப்ப லாபத்துக்காக வருந்தி கதிக்கு பதறி, Kathikku Pathari - அத்யுஷ்ணமான காடுகளிலும் மலைகளிலும் கடலும், Kadalum - கடல்களிலும் (நின்று கொண்டு) எல்லாம் கொதிக்க, Ellam Kothikka - எல்லா அவயங்களும் தவம் செய்யும் கொள்கை, Thavam Seyyum Kolgai - தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவத்தை அற்றேன், Attren - விட்டொழித்தேன் |