திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3791 | இராமாநுச நூற்றந்தாதி || 15 | சோராத காதல் பெருஞ் சுழிப்பால், சொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத் திராமானுசன் றன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே? | பதவுரை Show / Hideசோராத காதல் பெரு சுழிப்பால், Soradha Kadhal Peru Suzhippal - ஒரு நாளும் குறைவு படாத ப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே தொல்லை மாலை ஒன்றும் பாராது, Thollai Malai Ondrum Paradhu - நித்யனான எம்பெருமான் படியைச் சிறிதும் நிரூபியாமல் அவனை, Avanai - அவ் வெம்பெருமானை நோக்கி பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன், Pallandu Endru Kappidum Panmaiyan - பல்லாண்டு பல்லாண் டென்று மங்ளாசாஸநம் பண்ணுகையையே நித்ய ஸவபாவமாக வுடையரான பெரியாழ்வாருடைய தாள் பேராத உள்ளத்து, Thal Peradha Ullaththu - திருவடிகள் விட்டகலாத திருவுள்ளத்தை யுடையரான இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய பிறங்கிய சீர், Pirangiya Seer - மிக்க திருக் குணங்களை சாரா, Sara - தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத மனிசரை, Manisarai - மநுஷ்யர்களை சேரேன், Seren - பற்ற மாட்டேன் இனி, Ini - இப்படிப்பட்ட உறுதி பிறந்த பின்பு எனக்கு என்ன தாழ்வு, Enakku Enna Thalvu - அடியேனுக்கு என்னகுறை?. |