திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3791 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3791இராமாநுச நூற்றந்தாதி || 15
சோராத காதல் பெருஞ் சுழிப்பால், சொல்லை மாலை யொன்றும் பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத் திராமானுசன் றன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?
பதவுரை Show / Hide
சோராத காதல் பெரு சுழிப்பால், Soradha Kadhal Peru Suzhippal - ஒரு நாளும் குறைவு படாத ப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே
தொல்லை மாலை  ஒன்றும் பாராது, Thollai Malai Ondrum Paradhu - நித்யனான எம்பெருமான்  படியைச் சிறிதும் நிரூபியாமல்
அவனை, Avanai - அவ் வெம்பெருமானை  நோக்கி
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன், Pallandu Endru Kappidum Panmaiyan - பல்லாண்டு பல்லாண் டென்று மங்ளாசாஸநம் பண்ணுகையையே நித்ய ஸவபாவமாக வுடையரான பெரியாழ்வாருடைய
தாள் பேராத உள்ளத்து, Thal Peradha Ullaththu - திருவடிகள் விட்டகலாத திருவுள்ளத்தை யுடையரான
இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய
பிறங்கிய சீர், Pirangiya Seer - மிக்க திருக் குணங்களை
சாரா, Sara - தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத
மனிசரை, Manisarai - மநுஷ்யர்களை
சேரேன், Seren - பற்ற மாட்டேன்
இனி, Ini - இப்படிப்பட்ட உறுதி பிறந்த பின்பு
எனக்கு என்ன தாழ்வு, Enakku Enna Thalvu - அடியேனுக்கு என்னகுறை?.