திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3792 | இராமாநுச நூற்றந்தாதி || 16 | தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதுங் கலியே
ஆள்கின்ற நாள் வந்தளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் லருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுச னென்னும் மா முனியே | பதவுரை Show / Hideஅரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையை, Arangarmouli Soozhkindra Maalaiyai - ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூ மாலையை சூடி கொடுத்தவள், Soodi Koduththavala - தனது திருக் குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல், Thol Arulal Vaazhkindra Vallar - அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான இராமாநுசன் என்னும் மாமுனி, Iramanusan Ennum Mamuni - ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்) தாழ்வு ஒன்று இல்லா மறை, Thalvu Ondru Illa Marai - ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது தாழ்ந்து, Thazhndu - (குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற தலம், Thalam - முழுதும் பூமி யெங்கும் கலியே ஆள்கின்ற நாள், Kalaiye Aalkindra Naal - கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே வந்து, Vandhu - இங்கே வந்தவதரித்து அளித்தவன் காண்மின், Aliththavan Kaanmin - (அந்த வேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை)ரக்ஷித்தருளினவர். |