திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3792 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3792இராமாநுச நூற்றந்தாதி || 16
தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதுங் கலியே ஆள்கின்ற நாள் வந்தளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுச னென்னும் மா முனியே
பதவுரை Show / Hide
அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையை, Arangarmouli Soozhkindra Maalaiyai - ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூ மாலையை
சூடி கொடுத்தவள், Soodi Koduththavala - தனது திருக் குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல், Thol Arulal Vaazhkindra Vallar - அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான
இராமாநுசன் என்னும் மாமுனி, Iramanusan Ennum Mamuni - ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்)
தாழ்வு ஒன்று இல்லா மறை, Thalvu Ondru Illa Marai - ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது
தாழ்ந்து, Thazhndu - (குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற
தலம், Thalam - முழுதும் பூமி யெங்கும்
கலியே ஆள்கின்ற நாள், Kalaiye Aalkindra Naal - கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே
வந்து, Vandhu - இங்கே வந்தவதரித்து
அளித்தவன் காண்மின், Aliththavan Kaanmin - (அந்த வேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை)ரக்ஷித்தருளினவர்.