திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3793 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3793இராமாநுச நூற்றந்தாதி || 17
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும் தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில் இனியானை எங்கள் இராமா னுசனை வந் தெய்தினரே
பதவுரை Show / Hide
கலை பரவும் தனி ஆனையை, Kalai Paravum Thani Aanaiyai - ஸகல சாஸ்த்ரங்களாலும் துதிக்கப் பெற்ற அத்விதீயமான மத்த கஜம் போன்ற
கண்ணமங்கை நின்றானை, Kannamangai Nindraanai - திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பத்தராவிப் பெருமாளைக் குறித்து
உலகில், Ulagil - இவ்வுலகில்
தண் தமிழ் செய்த, Than Tamil Seitha - ஸம்ஸார தாப ஹரமான திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளின
நீலன் தனக்கு, Neelan Thanakku - திருமங்கையாழ்வார் பக்கல்
இனியானை, Iniyanai - ப்ரேம முடையவராய்
எங்கள், Engal - எங்களுக்குத் தலைவரான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
வந்து எய்தினர், Vandu Eythinar - வந்து பணிந்த மஹான்கள்
துயரங்கள் முந்திலும் முனியார், Thuyarangkal Mundhilum Muniyar - தாப த்ரயம் செறிந்தாலும் வருத்தப்பட மாட்டார்கள்
இன்பங்கள் மொய்த்திடினும் மனம் கனியார், Inbangkal Moyththidinum Manam Kaniyar - ஸுகங்கள் செறிந்தாலும் களிப்படைய மாட்டார்கள்