திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3793 | இராமாநுச நூற்றந்தாதி || 17 | முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனை வந் தெய்தினரே | பதவுரை Show / Hideகலை பரவும் தனி ஆனையை, Kalai Paravum Thani Aanaiyai - ஸகல சாஸ்த்ரங்களாலும் துதிக்கப் பெற்ற அத்விதீயமான மத்த கஜம் போன்ற கண்ணமங்கை நின்றானை, Kannamangai Nindraanai - திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பத்தராவிப் பெருமாளைக் குறித்து உலகில், Ulagil - இவ்வுலகில் தண் தமிழ் செய்த, Than Tamil Seitha - ஸம்ஸார தாப ஹரமான திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளின நீலன் தனக்கு, Neelan Thanakku - திருமங்கையாழ்வார் பக்கல் இனியானை, Iniyanai - ப்ரேம முடையவராய் எங்கள், Engal - எங்களுக்குத் தலைவரான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை வந்து எய்தினர், Vandu Eythinar - வந்து பணிந்த மஹான்கள் துயரங்கள் முந்திலும் முனியார், Thuyarangkal Mundhilum Muniyar - தாப த்ரயம் செறிந்தாலும் வருத்தப்பட மாட்டார்கள் இன்பங்கள் மொய்த்திடினும் மனம் கனியார், Inbangkal Moyththidinum Manam Kaniyar - ஸுகங்கள் செறிந்தாலும் களிப்படைய மாட்டார்கள் |