திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3795 | இராமாநுச நூற்றந்தாதி || 19 | உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்
அறி தர நின்ற,இராமானுச னெனக் காரமுதே | பதவுரை Show / Hideஉறுபெரு செல்வமும் தந்தையும் உயர் குருவும், Uruperu Selvamum Thandaiyum Uyar Guruvum - சிறந்த பெரிய ஸம்பத்தும் மாதா பிதாக்களும் ஸதாசார்யனும் வெறி தரு பூமகள் நாதனும், Veri Tharu Poovagal Nadhanum - மணம் மிக்க பூவைப் பிறப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியாருக்குக் கொழுநனான ஸர்வேச்வரனும் (ஆகிய எல்லாம் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று, Maran Vilangiya Seer Nerai Tharum Sem Tamil Aaraname Endru - நம்மாழ்வார் (தமக்கு) ப்ரகாசித்த பகவத் குணங்களின் அடைவே அருளிச் செய்த செந்தமிழ் வேதமே யென்று இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற, I Neel Nilathor Aridhar Nindra - இப் பெரிய வுலகிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் எனக்கு, Enakku - அடியேனுக்கு ஆர் அமுது, Ar Amuthu - பரம போக்யர் |