திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3796 | இராமாநுச நூற்றந்தாதி || 20 | ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை யுணர்ந்தோர் கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்றுய்யும் சீலங் கொள் நாத முனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசனென்றன் மா நிதியே | பதவுரை Show / Hideஆரம் பொழில், Aram Pozhil - சந்தனச் சோலைகளை யுடைய தென் குருகை, Then Kurugai - அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த) பிரான், Piran - மஹோபகாரகரான ஆழ்வாருடைய அமுதம் திருவாய், Amudham Thiruvai - பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த ஈரம் தமிழன் இசை, Eeram Tamizhan Isai - ஈரச் சொல்லாகிய திருவாய்மொழியின் இசையை உணர்ந்தோர்கட்கு, Unarnthorkadku - அறிந்தவர்களுக்கு இனியவர் தம், Iniyavar Tham - இஷ்டராயிருப்பவர்களுடைய சீரை, Seerai - குணங்களை பயின்று, Payinru - அப்யஸித்து உய்யும் சீலம் கொள், Uyum Seelam Kol - ஸத்தை பெறும் சீலத்தை யுடையரான நாதமுனியை, Nadhamuniyai - நாத முனிகளை நெஞ்சால், Nenjal - தம் திருவுள்ளத்தாலே வாரி பருகும், Vaari Parugum - அபிநிவேசத்தோடு அனுபவிக்கின்ற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என் தன் மா நிதி, En Than Maa Nidhi - எனக்கு அக்ஷயமான நிதி. |