திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3796 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3796இராமாநுச நூற்றந்தாதி || 20
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை யுணர்ந்தோர் கட்கு இனியவர் தம் சீரைப் பயின்றுய்யும் சீலங் கொள் நாத முனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசனென்றன் மா நிதியே
பதவுரை Show / Hide
ஆரம் பொழில், Aram Pozhil - சந்தனச் சோலைகளை யுடைய
தென் குருகை, Then Kurugai - அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த)
பிரான், Piran - மஹோபகாரகரான ஆழ்வாருடைய
அமுதம் திருவாய், Amudham Thiruvai - பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த
ஈரம் தமிழன் இசை, Eeram Tamizhan Isai - ஈரச் சொல்லாகிய திருவாய்மொழியின்  இசையை
உணர்ந்தோர்கட்கு, Unarnthorkadku - அறிந்தவர்களுக்கு
இனியவர் தம், Iniyavar Tham - இஷ்டராயிருப்பவர்களுடைய
சீரை, Seerai - குணங்களை
பயின்று, Payinru - அப்யஸித்து
உய்யும் சீலம் கொள், Uyum Seelam Kol - ஸத்தை பெறும் சீலத்தை யுடையரான
நாதமுனியை, Nadhamuniyai - நாத முனிகளை
நெஞ்சால், Nenjal - தம் திருவுள்ளத்தாலே
வாரி பருகும், Vaari Parugum - அபிநிவேசத்தோடு அனுபவிக்கின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என் தன் மா நிதி, En Than Maa Nidhi - எனக்கு அக்ஷயமான நிதி.