திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3798 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3798இராமாநுச நூற்றந்தாதி || 22
கார்த்திகை யானும் கரி முகத் தானும் கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும் பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை யேத்தும் இராமானுச னென்றன் சேம வைப்பே
பதவுரை Show / Hide
கார்த்திகையானும், Kaarthikayaanum - ஸுப்ரஹமண்யனும்
கரி முகத்தானும், Kari Mukaththaanum - கணபதியும்
கனலும், Kanalum - (அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும்
முக் கண் மூர்க்தியும், Mook Kan Moorkthiyum - சிவனும்
மோடியும், Modiyum - துர்க்கையும்
வெப்பும், Veppum - ஜ்வரதேவதையும்
முதுகு இட்டு, Mudhuku Ittu - முதுகுகாட்டி ஒடிப்போன பின்பு (அநந்யகதியான பாணாஸுரனானவன்
மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட, Moo Ulagum Pooththavane Endru Poatrida - “மூன்று உலகங்களையும் திருநாபிக் கமலத்திலே உண்டாக்கினபெருமானே!” (என்னைக்காத்தருள்) என்று போற்ற
வாணன் பிழை பொறுத்த, Vaanan Pizhai Poruththa - (அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின
தீர்த்தனை, Theerththanai - பாவநனான ஸர்வேச்வரனை
ஏத்தும், Aeththum - நித்யம் துதிக்கின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என் தன் சேமவைப்பு, En Than Saemavaippu - எனக்கு ஆபத் தநம்.