திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3799 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3799இராமாநுச நூற்றந்தாதி || 23
வைப்பாய வான் பொருள் என்று,நல்லன்பர் மனத் தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில் ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே!
பதவுரை Show / Hide
நல் அன்பர், Nal Anbar - விலக்ஷண பக்தி யுடையவர்கள்
வைப்பு ஆய வான் பொருள் என்று, Vaippu Aaya Vaan Porul Endru - “எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத் ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
இரு நிலத்தில், Iru Nilathil - இந்தப் பெரிய வுலகத்திலே
ஒப்பார் இலாத உறு வினையேன், Oppaar Ilaadha Uru Vinaiyen - ஒப்பற்ற மஹா பாபியான அடியேன்
வஞ்சம் நெஞ்சில் வைத்து, Vanjam Nenchil Vaiththu - (என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே  வைத்து
முப்போதும் வாழ்த்துவன், Muppodhum Vazhththuvan - ஸர்வ காலமும் ஏத்தா நின்றேன்;
இது, Idhu - மிகப் பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது
அவன், Avan - அவ் வெம்பெருமானானாருடைய
மொய் புகழ்க்கு, Moy Pugazhkkum - சிறந்த கீர்த்திக்கு
என் ஆம், En Aam - என்னாகுமோ? (அவத்யமமோ?)