திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3800 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3800இராமாநுச நூற்றந்தாதி || 24
மொய்த்த வெந் தீ வினையால் பல்லுடல் தொறும் மூத்து, அதனால் எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன் பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக் கைத்த மெய்ஞ் ஞானத்து இராமானுச னென்னும் கார் தன்னையே
பதவுரை Show / Hide
முன நாள்கள் எல்லாம், Muna Naalgal Ellam - கீழ்க் கழிந்த அநாதி காலமெல்லாம்
பல் உடல் தொறும், Pal Udal Thorum - பல பல சரீரங்கள் தோறும்
மொய்த்த வெம் தீ வினையால் மூத்து, Moyththa Vem Thee Vinaiyaal Mooththu - ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதி க்ரூரமான கர்மத்தாலே கிழத் தனம் வருமளவும் வாஸஞ்செய்து
அதனால், Adhanaal - அத்தாலே
எய்த்து ஒழிந்தேன், Eyththu Ozhindhen - மிக்க பரிதாப மடைந்தேன்;
பொய் தவம் போற்றும் புலைச் சமயங்கள், Poy Thavam Poattrum Pulai Samayangal - கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள்
நிலத்து அவிய, Nilaththu Aviy - இந் நில வுலகத்திலே அற்றொழியும்படி
கைத்த, Kaiththa - நிரஸித்தருளின
மெய் ஞானத்து, Mei Gnanaththu - உண்மை ஞான முடையரான
இராமாநுசன் என்னும் கார் தன்னை, Iraamaanusan Ennum Kaar Thannai - எம்பெருமானாராகிற  காள மேகத்தை
இன்று கண்டு, Indru Kandu - இன்று அடியேன் ஸேவிக்கப் பெற்று
உயர்ந்தேன், Uyarnthen - சிறந்தவனானேன்.