திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3801 | இராமாநுச நூற்றந்தாதி || 25 | காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே | பதவுரை Show / Hideகார் எய் கருணை இராமாநுச!, Kaar Ey Karunai Iraamaanusa - மேகத்தை யொத்த கருணையை யுடைய எம்பெருமானாரே! நான், Naan - அடியேன் அல்வலுக்கு நேரே உறைவு இடம், Alvalukku Neere Uraivu Idam - துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தானமாயிருப்பவன்; என்னை, Ennai - இப்படிப்பட்ட அடியேனை நீ வந்து உற்றபின், Nee Vandu Utrapin - ஸ்வீகரித் தருளின பின்பு உன் சீரே, Un Seere - தேவரீருடைய கல்யாண குணங்களே உயிர்க்கு உயிர் ஆய், Uyirkku Uyir Aay - ஆத்மாவுக்கு தாரகமாய் அடியேற்கு, Adiyeerkku - அடியேனுக்கு இன்று தித்திக்கும், Indru Thithikkum - இன்று ரஸியா நின்றது; நின் அருளின் தன்மை, Nin Arulin Thanmai - தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை இ கடல் இடத்தில், I Kadal Idathil - கடல் சூழ்ந்த இப் பூ மண்டலத்தில் ஆரே அறிபவர், Aare Aripavar - அறியக் கூடியவர்கள் ஆருமில்லை. |