திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3801 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3801இராமாநுச நூற்றந்தாதி || 25
காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில் ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன் சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே
பதவுரை Show / Hide
கார் எய் கருணை இராமாநுச!, Kaar Ey Karunai Iraamaanusa - மேகத்தை யொத்த கருணையை யுடைய எம்பெருமானாரே!
நான், Naan - அடியேன்
அல்வலுக்கு நேரே உறைவு இடம், Alvalukku Neere Uraivu Idam - துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தானமாயிருப்பவன்;
என்னை, Ennai - இப்படிப்பட்ட அடியேனை
நீ வந்து உற்றபின், Nee Vandu Utrapin - ஸ்வீகரித் தருளின பின்பு
உன் சீரே, Un Seere - தேவரீருடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு உயிர் ஆய், Uyirkku Uyir Aay - ஆத்மாவுக்கு தாரகமாய்
அடியேற்கு, Adiyeerkku - அடியேனுக்கு
இன்று தித்திக்கும், Indru Thithikkum - இன்று ரஸியா நின்றது;
நின் அருளின் தன்மை, Nin Arulin Thanmai - தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை
இ கடல் இடத்தில், I Kadal Idathil - கடல் சூழ்ந்த இப் பூ மண்டலத்தில்
ஆரே அறிபவர், Aare Aripavar - அறியக் கூடியவர்கள் ஆருமில்லை.