திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3802 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3802இராமாநுச நூற்றந்தாதி || 26
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம் மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர் அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே
பதவுரை Show / Hide
என் செய்வினை ஆம், En Seivinaik Aam - என்னாலே செய்யப் பட்ட  வினையாகிற
மெய் குற்றம் நீக்கி, Mei Kuttram Neekki - நிலை நின்ற தோஷங்களைப் போக்கி
விளங்கிய, Vilangiya - (இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோமே என்னும் மகிழ்ச்சியாலே உஜ்வலரான
மேகத்தை, Megathai - பரம உதாரராய்
திக்கு உற்ற கீர்த்தி, Thikku Utra Keerthi - திசைகள் தோறும் விரிந்த புகழை யுடையரான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
மேவும், Maevum - பொருந்தி யிருக்கின்ற
நல்லோர், Nallor - விலக்ஷணர்கள்
எக் குற்றவாளர், Ek Kuttravalar - யாதொரு குற்றத்தை யுடையராகவும்
எது பிறப்பு, Edhu Pirappu - யாதொரு ஜன்மத்தையுடையராகவும்
எது இயல்பு ஆக, Edhu Iyalthu Aaga - யாதொரு சரிதையை யுடையவராகவும்
நின்றோர், Ninruor - முன்பு நின்றார்களோ,
அக் குற்றம், Ak Kuttram - அந்தக் குற்றமும்
அப் பிறப்பு, Ap Pirappu - அந்த ஜன்மமும்
அ இயல்வே, A Iyalve - அந்த சரிதையுமே
நம்மை, Nammai - நம்மை
ஆள் கொள்ளும், Aal Kollum - அடிமைப் படுத்திக் கொள்ளவற்று.