திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3802 | இராமாநுச நூற்றந்தாதி || 26 | திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே | பதவுரை Show / Hideஎன் செய்வினை ஆம், En Seivinaik Aam - என்னாலே செய்யப் பட்ட வினையாகிற மெய் குற்றம் நீக்கி, Mei Kuttram Neekki - நிலை நின்ற தோஷங்களைப் போக்கி விளங்கிய, Vilangiya - (இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோமே என்னும் மகிழ்ச்சியாலே உஜ்வலரான மேகத்தை, Megathai - பரம உதாரராய் திக்கு உற்ற கீர்த்தி, Thikku Utra Keerthi - திசைகள் தோறும் விரிந்த புகழை யுடையரான இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை மேவும், Maevum - பொருந்தி யிருக்கின்ற நல்லோர், Nallor - விலக்ஷணர்கள் எக் குற்றவாளர், Ek Kuttravalar - யாதொரு குற்றத்தை யுடையராகவும் எது பிறப்பு, Edhu Pirappu - யாதொரு ஜன்மத்தையுடையராகவும் எது இயல்பு ஆக, Edhu Iyalthu Aaga - யாதொரு சரிதையை யுடையவராகவும் நின்றோர், Ninruor - முன்பு நின்றார்களோ, அக் குற்றம், Ak Kuttram - அந்தக் குற்றமும் அப் பிறப்பு, Ap Pirappu - அந்த ஜன்மமும் அ இயல்வே, A Iyalve - அந்த சரிதையுமே நம்மை, Nammai - நம்மை ஆள் கொள்ளும், Aal Kollum - அடிமைப் படுத்திக் கொள்ளவற்று. |