திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3803 | இராமாநுச நூற்றந்தாதி || 27 | கொள்ளக் குறை வற் றிலங்கிக் கொழுந்து விட் டோங்கிய வுன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே! | பதவுரை Show / Hideஇராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே! கொள்ள குறைவு அற்று இலங்கி, Kolla Kuraiyvu Attru Ilangi - கொள்ளக் கொள்ளக் குறையாமல் தானே விளங்கி கொழுந்துவிட்டு ஓங்கிய, Kozhundhuvittu Ongiyaa - மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான உன் வள்ளல் தனத்தினால், Un Vallar Thanatthinaal - தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே வல் வினையேன் மனம், Val Vinaiyen Manam - மஹா பாபியான எனது நெஞ்சிலே நீ புகுந்தாய், Nee Pugundhai - (தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று; இது, Idhu - (வஸிஷ்டின் சண்டாளர் க்ருஹத்தில் புகுந்தாற் போலே) புகுந்தவிது, வெள்ளை, Vellai - பரிசுத்தமாய் சுடர் விடும், Sudar Vidum - பரிசுத்தமாய் விளங்கா நின்றுள்ள உன் பெரு மேன்மைக்கு, Un Peru Menmaikku - தேவரீருடைய ப்ரபாவத்திற்கு இழுக்கு என்று, Izhukku Endru - அவத்யாவஹம் என்று என் தனி நெஞ்சம், En Thani Nenjam - எனது துணையற்ற நெஞ்சானது தள்ளுற்று இரங்கும், Thallutru Irangum - தளர்ந்து ஈடுபடா நின்றது. |