திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3803 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3803இராமாநுச நூற்றந்தாதி || 27
கொள்ளக் குறை வற் றிலங்கிக் கொழுந்து விட் டோங்கிய வுன் வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே!
பதவுரை Show / Hide
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
கொள்ள குறைவு அற்று இலங்கி, Kolla Kuraiyvu Attru Ilangi - கொள்ளக் கொள்ளக் குறையாமல் தானே விளங்கி
கொழுந்துவிட்டு ஓங்கிய, Kozhundhuvittu Ongiyaa - மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான
உன் வள்ளல் தனத்தினால், Un Vallar Thanatthinaal - தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே
வல் வினையேன் மனம், Val Vinaiyen Manam - மஹா பாபியான எனது நெஞ்சிலே
நீ புகுந்தாய், Nee Pugundhai - (தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று;
இது, Idhu - (வஸிஷ்டின் சண்டாளர் க்ருஹத்தில் புகுந்தாற் போலே) புகுந்தவிது,
வெள்ளை, Vellai - பரிசுத்தமாய்
சுடர் விடும், Sudar Vidum - பரிசுத்தமாய் விளங்கா நின்றுள்ள
உன் பெரு மேன்மைக்கு, Un Peru Menmaikku - தேவரீருடைய ப்ரபாவத்திற்கு
இழுக்கு என்று, Izhukku Endru - அவத்யாவஹம் என்று
என் தனி நெஞ்சம், En Thani Nenjam - எனது துணையற்ற நெஞ்சானது
தள்ளுற்று இரங்கும், Thallutru Irangum - தளர்ந்து ஈடுபடா நின்றது.