திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3804 | இராமாநுச நூற்றந்தாதி || 28 | நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன் புகழ் அன்றி யென் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே! | பதவுரை Show / Hideநெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை, Nenjin Kadai Konda Kanjanai - நெஞ்சிலே கல்மிஷத்தை யுடையனா யிருந்த கம்ஸனை காய்ந்த, Kaayndha - முடித்த நிமலன், Nimalan - ஹேயப்ரத்ய நீகனாய், நங்கள் பஞ்சி திருவடி, Nangal Panji Thiruvadi - ஆச்ரிதர்பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான பின்னை தன் காதலன், Pinnai Than Kaadhalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ண பிரானாடைய பாதம் நண்ணு, Paatham Nannu - திருவடிகளை ஆச்ரயியாத வஞ்சர்க்கு, Vanjarkku - ஆத்மாபஹாரக் கள்வர்களுக்கு அரிய, Ariya - துர்லபரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய புகழ் அன்றி, Pugazh Andri - குணங்களை யொழிய (மற்றொன்றை) என் வாய், En Vaai - என் வாக்கானது கொஞ்சி பரவகில்லாது, Konji Paravagilladhu - குலாவி ஏத்த மாட்டாது; இன்று கூடியது வாழ்வு, Indru Koodiyadhu Vazhvu - இன்று (எனக்கு) நேர்ந்த வாழ்ச்சியானது என்ன, Enna - ஆச்சரியமானது |